கடந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் பரீட்சைகளில் சிறந்த பெருபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கு ஒரு நிகழ்வு சென்ற 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி மாவட்டக்கிளையின் தலைமை பீடம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களும், மாவட்டத்தின் 13 பிரதேசக் கிளை உறுப்பினர்கள் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கண்டி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷைக் எம்.இரான் நழீமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.